Search This Blog

Sunday, November 13, 2022

பஞ்சபூதங்கள்

 

 நெருப்பு

நெருப்பு தன்னைத்தானே எரித்துக் கொண்டு

மற்றவர்களுக்கு ஒளி தருகிறது


காற்று

காற்று தன்னை 

அசுத்தப் படுத்திக் கொண்டு

மற்றவர்களுக்கு உயிர் தருகிறது


நிலம்

நிலம் தன்னைக் 

காயப்படுத்திக் கொண்டு

மற்றவர்களுக்கு உயிர் தருகிறது


தண்ணீர் 

தண்ணீர் தன்னை

அசுத்தப் படுத்திக் கொண்டு

மற்றவர்களை சுத்தப் படுத்துகிறது


ஆகாயம்

ஆகாயம் தன்னிடம் சேரும்

நச்சுக்களையெல்லாம் தாங்கிக் கொண்டு

மற்றவர்களுக்கு சுத்தத்தை தருகிறது.


பஞ்சபூதங்கள் எல்லாம் பன்னெடுங்காலமாக

தம்மை அழித்துக்கொண்டு

மற்றவர்களுக்கு நன்மை செய்து

நிலைத்து நிற்பதுபோல


பஞ்சபூதங்களின் அம்சமாகிய

மனிதர்களில் எவர்தம்மை

வருத்திக்கொண்டு மற்றவர்களுக்கு நன்மைசெய்கிறார்களோ

அவர்கள் பெருமை இவ்வுலகில்

பன்னெடுங்காலத்திற்கு நிலைத்து நிற்கும்.

-.ந.ப.

Search This Blog