ஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன?
எட்டிமரம் காயாதிருந்தென்ன, காய்த்துப்பயனென்ன?
செல்லாக்காசு இருந்தாலென்ன, அழித்தாலென்ன?
பாட்டன்காலத்து ஓட்டைக்காசு இன்றும் இருக்கிறது
கோடிகோடியாய் பதுக்குபவனைப்பிடிக்காமல்
ஓடிஓடிஉழைப்பவனை அலைக்கழிப்பதேன்?
கோமாளிகளின் கூத்தை மிஞ்சியது புதுச்சட்டம்!
