சக மனிதர்களின் தாக்கம் இல்லாதவரை எல்லா மனிதர்களும் நல்லவர்களே. ஏனென்றால் யாரும் தனக்குத்தானே துன்பம் ஏற்படுத்திக் கொள்வதில்லை
எந்தொரு மனிதனும் தனக்குத் தெரிந்த வரையில் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை.
அவன் செய்யும் ஒவ்வொரு செயலும்—நல்லதோ கெட்டதோ—அவனுடைய பார்வையில் அப்போது அது நன்மை என்றே தோன்றுகிறது.
-தனிமையில் இருக்கும் மனிதன் பெரும்பாலும் அமைதியானவன்.
-கூட்டத்தில் இருக்கும் மனிதன் தான் மாறுகிறான்.
-ஆசை, பயம், போட்டி, பொறாமை, அதிகாரம், ஒப்பீடு
இவை அனைத்தும் சக மனிதர்களின் தாக்கத்தில்தான் உருவாகின்றன.
அதனால்
“யாரும் தனக்குத் தானே துன்பம் ஏற்படுத்திக் கொள்வதில்லை”
என்பது நிதர்சனமான உண்மை.
ஆனால்
“பிறருடன் ஒப்பிடத் தொடங்கியவுடன்,
பிறரால் தூண்டப்படும்போது,
மனிதன் பிறருக்கும் துன்பம் தரத் தொடங்குகிறான், சில சமயம் தனக்கும் சேர்த்து- தற்கொலை வரை.
