ஒன்னுமில்ல(Nothing)
இது பெரும்பாலும் "எல்லாமே இருக்கிறது" என்பதன் வெளிப்பாடு.
மனதில் ஒரு பெரிய பாரத்தை வைத்துக்கொண்டு, அதை விவரிக்க வார்த்தைகள் இல்லாதபோது அல்லது அதைப் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லாதபோது சொல்லும் முதல் பொய் இதுதான்.
புரிந்து கொள்ள மாட்டார்கள் என்ற ஏமாற்றமும் இதில் அடங்கியிருக்கும்.
சும்மா (Just like that)
இந்த ஒரு வார்த்தைக்குள் பல காரணங்கள் உண்டு.
யாரையாவது மிகவும் பிடித்துப் போய் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்போம், ஏன் என்று கேட்டால் "சும்மா" என்போம். அங்கு சும்மா என்பது "உன் குரலைக் கேட்கத் தோன்றியது" என்று அர்த்தம்.
வலிக்கும் போது ஏன் அழுகிறாய் எனக் கேட்டால் வரும் "சும்மா" என்பதற்குப் பின்னால், சொல்ல முடியாத ஒரு ரகசியம் இருக்கும்.
பரவாயில்லை(It's okay / Never mind)
இதுதான் இருப்பதிலேயே வலிமையான வார்த்தை.
மனம் காயப்பட்டிருந்தாலும், உறவு முறிந்துவிடக் கூடாது என்பதற்காகச் சொல்லும் ஒரு சமரசம்.
உண்மையில் "பரவாயில்லை" என்று சொல்லும் போதுதான் மனதிற்குள் ஏதோ ஒன்று பெரிதாகப் பாதித்திருக்கிறது என்று அர்த்தம். அது ஒரு பெருந்தன்மையான மன்னிப்பாகவோ அல்லது "இனி பேசிப் பயன் இல்லை" என்ற விரக்தியாகவோ இருக்கலாம்.
ஆகவே,
அடுத்தமுறை இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் பொழுது கவனமாக பயன்படுத்தவும்.
