Search This Blog

Sunday, March 29, 2015

ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள்
ஆயிரமாயிரம் உயிரினங்கள்
அண்ட சராசரங்கள் அனைத்திலும் ஒரு ஒழுங்கு


பாழாய்ப்போன மனிதர்களிடம் தான் 
எத்தனை ஒழுங்கீனம் !
எத்தனை ஏற்றத்தாழ்வு !

அரை குறை ஆடையுடன் ஆயிரம் மீட்டர் துணி நெசவு செய்தான்
 -நெசவாளி

துண்டு இடம் கூட இல்லாதவன் பல ஏக்கர் பயிர் செய்தான்
-கூலித்தொழிலாளி

அழுக்குத் துணியைக் கட்டிக்கொண்டு அடுத்தவன்  துணிக்கு வெல்லாவி  வைத்தான்
 -சலவைத் தொழிலாளி

தன் நிலை மறந்து பத்து பைசா பிச்சை போட்டவரை "நல்ல இருங்க சாமி" என்று  வாழ்த்தினான்
 -பிச்சைக்காரன்

தகரத் தட்டில் சாப்பிடுபவன் சமைத்ததை தங்கத் தட்டில் சாப்பிடுகிறான்-
பணக்காரன்

ஒண்ட இடம் கூட இல்லாத நிலையில் கட்டினான் பல மாடி கட்டிடம்
- கட்டிடத் தொழிலாளி

உழைக்கத் தெம்பிருந்தும் உட்கார்ந்து திங்க ஆசைப்படுகிறான்-
சோம்பேறி

பதிந்தது சில....பட்டியல் பெரிது ......

.ந.ப .





Search This Blog