Search This Blog

Friday, September 18, 2015

என் ஆரம்ப வேலையில் அதிக சம்பளமில்லை 
வெளியே சொல்லவேண்டாம் என்றன  உறவுகள் 
ஏனென்றால் அது அவர்களுக்குக் கௌரவமாக இல்லை 
மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதால்

அடுத்தடுத்த வேலையில் அதிக சம்பளம் கிடைத்தது 
வெளியே சொல்லவேண்டாம் என்றன  உறவுகள்
ஏனென்றால் அது அவர்களுக்குக் கௌரவமாக இருந்தது
மற்றவர்கள் பொ றாமைப் படுவார்கள் என்பதால்

 எந்த நிலையிலும் நான் நானாக இருந்து 
என்கடமையைச் செய்ததைத் தவிர
என்னிடத்தில் எந்த மாற்றமும் இல்லை!
மற்றவர்களின் சிந்தனைக்கும் செயலுக்கும் நான் பொறுப்பு இல்லை !

Search This Blog