திருக்குறளில்
புலி
பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: ஊக்கம் உடைமை:
குறள் எண்: 599
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
பெரிய உடம்பும், கூர்மையான தந்தங்களையுமுடைய யானை உருவத்தில் சிறிதான ஆனால் வலிமையான ஊக்கத்தையுடைய புலி தாக்கினால் யானை பயந்து ஒதுங்கி விடும். ஆகவே உருவத்தை விட ஊக்கமுடைமை அல்லது மன வலிமையே பெரியதென்று அறிந்து கொள்வோம்.
🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: கூடா ஒழுக்கம்:
குறள் எண்: 273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
மனதை அடக்கி ஒழுக்கமான வாழ்க்கை வாழாதவன் துறவி போல வேடம் போட்டு பிறரை ஏமாற்றி வாழ்வது புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பசு புல் மேய்வதைப் போன்றதாகும்.
🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯