திருக்குறளில்
காக்கை
பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: சுற்றந் தழால்: குறள் எண்: 527
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
காக்கை தனக்கு இரை கிடைத்தால் அது தன் கூட்டத்தைக் கூவி அழைத்து பகிர்ந்து உண்ணும், அதுபோலத் தன்னிடம் உள்ளதை சுற்றத்தாருக்கு பகிர்ந்து கொடுத்து வாழும் மனிதர்கள் சுற்றத்தாருடன் பெருமையுடனும், புகழுடனும் வாழ்வார்கள்.
🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦
பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: காலமறிதல்: குறள் எண்: 481
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
கோட்டான் எனும் பறவை இரவில் வலிமையுடன் இருக்கக் கூடியது. தன்னை விட வலிமையான கோட்டானை காக்கை பகல் நேரத்தில் எளிதாக வென்றுவிடும். அதுபோலப் பகைவரை வெல்லுவதற்குத் தக்க காலம் அறிந்து செயல்பட வேண்டும்.
🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦