பஞ்சபூதங்கள்
நெருப்பு
விளக்காக இருந்தால் ஒளி;
எரியாய் மாறினால் அழிவு.
நீர்
குளத்தில் இருந்தால் வாழ்வு;
வெள்ளமாக வந்தால் பேரழிவு.
காற்று
தென்றலாக இருந்தால் சுவாசம்;
புயலானால் பேரழிவு.
நிலம்
பண்பட்டால் விவசாயம்;
குலைந்தால் குடி சாயும்.
ஆகாயம்
வெட்டவெளியாய் இருந்தால் அமைதி;
இடி, மின்னல், மழை — அதிர்வு.
நெருப்பு பெருந்தீயாய் மாறினால்,
நிலம் சூடாகும்;
காற்று மாசுபடும்;
ஆகாயம் அசுத்தமாகும்.
அந்த நெருப்பை அணைக்க
பெருநீர் தேவைப்படும்.
அவ்வளவிலே
ஒன்றின் அத்துமீறல்
மற்ற அனைத்தையும் இழுத்துச் செல்கிறது
பஞ்சபூதங்கள் எப்போதும் இணைந்தவை.
ஒன்றின் சமநிலை மாறினால்,
மற்ற அனைத்தும் சமநிலையை இழக்கும்.
இதுவே இயற்கை —சமநிலையே வாழ்க்கை.
. ந.ப.
