Search This Blog

Tuesday, December 30, 2025

பஞ்சபூதங்கள்

பஞ்சபூதங்கள்

நெருப்பு
விளக்காக இருந்தால் ஒளி;
எரியாய் மாறினால் அழிவு.

நீர்
குளத்தில் இருந்தால் வாழ்வு;
வெள்ளமாக வந்தால் பேரழிவு.

காற்று
தென்றலாக இருந்தால் சுவாசம்;
புயலானால் பேரழிவு.

நிலம்
பண்பட்டால் விவசாயம்;
குலைந்தால் குடி சாயும்.

ஆகாயம்
வெட்டவெளியாய் இருந்தால் அமைதி;
இடி, மின்னல், மழை — அதிர்வு.

நெருப்பு பெருந்தீயாய் மாறினால்,
நிலம் சூடாகும்;
காற்று மாசுபடும்;
ஆகாயம் அசுத்தமாகும்.

அந்த நெருப்பை அணைக்க
பெருநீர் தேவைப்படும்.

அவ்வளவிலே
ஒன்றின் அத்துமீறல்
மற்ற அனைத்தையும் இழுத்துச் செல்கிறது

பஞ்சபூதங்கள் எப்போதும் இணைந்தவை.
ஒன்றின் சமநிலை மாறினால்,
மற்ற அனைத்தும் சமநிலையை இழக்கும்.

இதுவே இயற்கை —சமநிலையே வாழ்க்கை.

ந.ப.



Search This Blog