Search This Blog

Saturday, November 5, 2011

'நியாயம்'

'நியாயம்' என்பது ஒரு சுவாரஸியமான சொல். நியாயம் கேட்டு நம்மிடம் யார் பேச வந்தாலும், அவர் கூறுவதை நாம் ஆமோதிப்பதுதான் நியாயம் என்று கருதப்படுகிறது. சுயநலமில்லாமல் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை அநியாயர்களாகக் காட்டும். நாம் அந்நியர்களாக மாறிப் போய்விடுவோம். இங்கே எல்லோரும் ஒரே தராசை உபயோகப்படுத்துவது இல்லை. அதேபோல தன்னுடைய செய்கைகள் நியாயம் இல்லை என்று உள்மனதில் பட்டாலும் நியாயப்படுத்தும் வாதங்களைத் தங்களுக்குள்ளே உற்பத்தி செய்து, அந்த உள்மனதைச் சமாதானப்படுத்திக் கொள்கிறோம். அதுவும், நம் செய்கைகள் பிறருக்குத் தெரியாது என்ற நினைப்பில் இருந்து அது வெளிப்படும்போது நமக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சியால் மற்றவரை அநியாயக்காரர்களாக நாம் காட்ட முயற்சி செய்வோம். இதெல்லாம் வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படும் சம்பவங்கள். சகஜம்.
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

Search This Blog