சென்னை மழை
மழைக்கு முன்-
கூவம் மட்டும் நாறியது
மழைக்குப்பின் -
சென்னையே கூவமாக நாறியது
மழைக்கு முன்-
நிலத்தடி நீர் பல அடி கீழே போனது
மழைக்குப்பின் -
நிலத்திற்கு மேல் பல அடி மேலே நீர் போகிறது
மழைக்கு முன்-
ஏரிகள் இருந்த அடையாளம் தெரியவில்லை
மழைக்குப்பின் -
ஏரிகளின் அடையாளம் துல்லியமாக தெரிந்தது
மழைக்கு முன்-
குடிக்கத் தண்ணியில்லை
மழைக்குப்பின் -
ஊரெல்லாம் தண்ணீர் இருந்தும்
குடிக்கத்தண்ணியில்லை
இனியாவது நீர் நிலைகளை ஆக்கிரமிக்காமல்
முறையான வடிகால் வசதி, பாதாள சாக்கடை அமைத்து
வருமுன் காப்போம், வளமுடன் வாழ்வோம்