பிறந்த மண்ணில் கருப்பு ஒரு வண்ணம் என்றுதான் அறிந்திருந்தேன்
வாழும் மண்ணில் அது ஒரு இனம் என்றும் அறிந்துகொண்டேன்
இருட்டு கருப்பு அதனால் ஒரு பயம்
கறுப்பு இனத்தைக்கண்டு ஏன் பயம்
இருட்டை ஒழிக்க ஒளி கண்டோம்
இனத்துவேசத்தை ஒழிக்க என்ன வழி ??