திருக்குறளில்
மழை
அறத்துப்பால்: பாயிரவியல்: அதிகாரம்: வான் சிறப்பு:
குறள் எண்: 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
உலகத்தில் வாழும் உயிர்கள் உண்பதற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கும் அதை உண்பவர்களுக்குத் தானே உணவாகவும் அமைகிறது மழைநீர்.
☔☔☔☔☔
அறத்துப்பால்: பாயிரவியல்: அதிகாரம்: வான் சிறப்பு:
குறள் எண்: 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
பெய்யாமலிருந்து உலக உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக இந்த உயிர்களின் வாழ்வை வளமாக்குவதும் மழை.
☔☔☔☔☔
அறத்துப்பால்: இல்லறவியல்:அதிகாரம்:வாழ்க்கைத் துணைநலம்:
குறள் எண்: 55
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக கணவனையே தெய்வமாக வணங்கி வாழுகின்ற மனைவி போன்ற பெண்களின் உயரிய கற்பு நெறியால் அவர்கள் பெய் என்றால் மழை தானாகப் பெய்யும்.
☔☔☔☔☔
அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: ஒப்புரவறிதல்:
குறள் எண்: 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு
இந்த உலகத்தில் மழை பெய்வது எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்த்துப் பெய்வதில்லை. அதுபோலச் சில மனிதர்களும் மழை போல் எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்த்து உதவி செய்வதில்லை.
☔☔☔☔☔
பொருட்பால்: ஒழிபியல்: அதிகாரம்: நன்றியில் செல்வம்:
குறள் எண்: 1010
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து
மற்றவர்களுக்குக் கொடுப்பதையே பெருமையாகக் கொண்டு வாழும் செல்வந்தர்களுக்கு சிறிதளவாவது வறுமை ஏற்படுமானால் அது மழை தரும் மேகம் மறைந்து மழை பொய்த்துப்போன நிலைக்குச் சமமாகும்.
☔☔☔☔☔