Search This Blog

Saturday, May 7, 2022

திருக்குறளில் மழை



திருக்குறளில்
மழை


அறத்துப்பால்: பாயிரவியல்: அதிகாரம்: வான் சிறப்பு:
குறள் எண்: 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

உலகத்தில் வாழும் உயிர்கள் உண்பதற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கும் அதை உண்பவர்களுக்குத் தானே உணவாகவும் அமைகிறது மழைநீர்.


☔☔☔☔☔

அறத்துப்பால்: பாயிரவியல்: அதிகாரம்: வான் சிறப்பு:
குறள் எண்: 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

பெய்யாமலிருந்து உலக உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக இந்த உயிர்களின் வாழ்வை வளமாக்குவதும் மழை.


☔☔☔☔☔


அறத்துப்பால்: இல்லறவியல்:அதிகாரம்:வாழ்க்கைத் துணைநலம்:
குறள் எண்: 55

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக கணவனையே தெய்வமாக வணங்கி வாழுகின்ற மனைவி போன்ற பெண்களின் உயரிய கற்பு நெறியால் அவர்கள் பெய் என்றால் மழை தானாகப் பெய்யும்.


☔☔☔☔☔

அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: ஒப்புரவறிதல்:
குறள் எண்: 211

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு

இந்த உலகத்தில் மழை பெய்வது எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்த்துப் பெய்வதில்லை. அதுபோலச் சில மனிதர்களும் மழை போல் எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்த்து உதவி செய்வதில்லை.


☔☔☔☔☔


பொருட்பால்: ஒழிபியல்: அதிகாரம்: நன்றியில் செல்வம்:
குறள் எண்: 1010

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து

மற்றவர்களுக்குக் கொடுப்பதையே பெருமையாகக் கொண்டு வாழும் செல்வந்தர்களுக்கு சிறிதளவாவது வறுமை ஏற்படுமானால் அது மழை தரும் மேகம் மறைந்து மழை பொய்த்துப்போன நிலைக்குச் சமமாகும்.

☔☔☔☔☔

Search This Blog