Search This Blog

Monday, September 30, 2024

ஆன்மீகம், பக்தி, கடவுள் நம்பிக்கை …..

 நம்முன்னோர்கள் ஆன்மீகம், பக்தி, கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் செய்த ஒரு காரியம் மிகவும் புத்திசாலித்தனமானது.

மலைகளைக் காக்க மலைமீது கோவில் கட்டினார்கள்.

மரங்களைப் பாதுகாக்க மரத்தடியில் சாமி சிலைகளையும், தலவிருட்சம் என்ற பெயரில் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு மரத்தை பாதுகாத்தார்கள்.

இன்றைய காலகட்டத்தில் பக்தி பகல்வேடமானதால் மலைகளும் மரங்களும் காணாமல்போவதில் ஆச்சரியமில்லை.

நமது முன்னோர்கள் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள் என்பதையும், பண்டைய காலங்களில், அவர்கள் ஆன்மீகம் மற்றும் பக்தியை மையமாகக் கொண்டு இயற்கையைக் காக்கும் முறைகளைப் பயன்படுத்தி மலைகளையும் மரங்களையும் மதிப்புடன் பார்த்து, அவற்றைப் பாதுகாக்க கோவில்கள் மற்றும் தலவிருட்சம் போன்ற அனுசரணைகளை உருவாக்கினர். இன்று, அவை அப்படியே தொடராத நிலையில், மலைகள் மற்றும் மரங்கள் அழிவடைந்து வருவது வருத்தத்துக்குரியது.

இயற்கையைப் பாதுகாப்பது மீண்டும் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாற வேண்டும்.

Search This Blog