Search This Blog

Saturday, September 20, 2025

பெரியார்- September 17

 ஈரோட்டு மண்ணில் எழுந்ததொரு சூரியன்,

மடமை இருட்டை விரட்டிய சிந்தனைப் புயல்.

பொய்களை உடைத்துப் பொற்காலம் காட்டிய,

பெரியார் வாழ்வு ஒளியின் பாதை.


அடிமை மனங்களைச் சிதைத்த உன் சொல்,

ஆணவச் சுவரெல்லாம் இடித்த உன் பலம்.

அறிவின் விளக்காய் எரிந்த உன் தீ,

அன்பின் விழுதாய் மலர்ந்தாய் நீ.


செப்டம்பர் பதினேழாம் நாள் பிறந்தாய்,

சமத்துவம் பாடி மனித இனத்தை உயர்த்தி பெரியாராய் உயர்ந்தாய்.

உன் கொள்கை நிலைத்திடும் 

உன் நினைவால் நம் உள்ளம் ஒளிர்ந்திடும் காலமெல்லாம்!


Search This Blog