கோவிலுக்குப் போனேன்
மனம் உருகிப் பிரார்த்திக்கும் போது
அர்ச்சகர்
சாமிக்குத் தட்சிணை போடு என்றார்
கல்லான சாமியைக் கண்டு மனம் உருகி
தாராளமாய்ப் போட்டேன்
மனமெல்லாம் நிறைந்து
கோவிலுக்கு வெளியே வந்தபோது
பிச்சைக்காரர்
சாமி பிச்சை போடுங்கள் என்றார்
உயிருள்ள மனிதனின் நிலையைக்கண்டு
மனம் இறுகிக் கல்லானது
சற்று சிந்தித்தபோது உறைத்தது
சாமிக்கு தட்சிணை போடுபவனும் நான்
பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுபவனும் நான்
கோவிலுக்கு உள்ளே ஆசாமியாக இருந்த நான்
கோவிலுக்கு வெளியே சாமியாகிவிட்டேன்
கல்லான சாமி எதுவும் கொடுக்கப்போவதில்லை
கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் கொடுப்பது நான்
ஆக,
என்னுள்ளேயே சாமி இருக்கிறது என்ற உண்மை புரிந்தது
கோவிலுக்குப் போவதை நிறுத்தி விட்டேன்
.N.P.